வேலூர்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரனிடம் காட்பாடியை சேர்ந்த மகாலட்சுமி அளித்த புகார் மனுவில், நான் மாதச்சீட்டு நடத்தி வருகிறேன். என்னிடம் அமமுக மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.ராஜா, மாதச்சீட்டு செலுத்தி வந்தார். கட்சி கூட்டங்களுக்காக பணம் தேவைப்படுவதாக கூறி என்னிடம் இருந்த நகைகளை வாங்கி அடகு வைத்து பெற்றார். மேலும் நான் நடத்திய சீட்டில் ரூ.4.28 லட்சமும் எடுத்துள்ளார். மேலும் அடமானம் வைத்த 30 சவரன் நகைக்கான பணம் ரூ.6 லட்சம் பெற்றார். இப்படி மொத்தம் ரூ.13 லட்சம் கொடுத்துள்ளேன். அதை திருப்பி கேட்டால் தரமறுத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்திருந்தார். ஏற்கனவே அவர் மீது வேலை வாங்கி வருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
The post அமமுக மாவட்ட செயலாளர் ரூ.13 லட்சம் மோசடி appeared first on Dinakaran.